Type Here to Get Search Results !

I Life - Translate

Medicinal Properties of Sweet Potato (Herbs and Their Medicinal Properties)

Sweet Potato - சர்க்கரைவள்ளி  கிழங்கு

This Page is About Medicinal Properties of Sweet Potato - சர்க்கரைவள்ளி  கிழங்கின் மருத்துவ குணங்கள்  & Herbs and Their Medicinal Properties 

சர்க்கரைவள்ளி  கிழங்கின் மருத்துவ குணங்கள்:

1. கிழங்கு உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான உணவு என்றால் அது சர்க்கரைவள்ளி கிழங்கு தான். இதை வேக வைத்தும் சாப்பிடலாம். பொரியல், சாம்பார், கூட்டு என சமைத்தும் சாப்பிடலாம் மற்றும் வெறுமென பச்சையாகவும் சாப்பிடலாம்.

2. சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் A, B, C, ஆண்டிஆஸிடண்ட்ஸ், இரும்புசத்து, நார்சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

3. சர்க்கரைவள்ளி கிழங்கில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற மினரல் சத்துக்கள் இருக்கின்றன. இவை நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் ஆகும். மேலும், இவை புற்றுநோய் கட்டிகள் உடலில் உருவாகாமல் தடுத்து பாதுகாக்கிறது.

4. மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரைவள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

5. பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இவை உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. மேலும் இரத்த சர்க்கரை அளவும் சீராக வைக்கவும் உடல் எடையினை குறைக்கவும் உதவுகின்றது.

6. சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் வைட்டமின் A கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் சர்க்கரைவள்ளி கிழங்கில் B1, B5, B6 சத்துக்களும் இருக்கின்றன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன.

7. சர்க்கரைவள்ளி கிழங்கை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா, கூடாத என யோசிக்க வேண்டாம். நீரிழிவு நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.

8. சர்க்கரைவள்ளி கிழங்கினை தினமும் உண்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஏனெனில் இதில் அதிக அளவில் போலெட்ஸ்  நிறைந்துள்ளது.

9. சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் பிரீ ராடிகள் செல் அழிவினை தடுக்க உதவும். மேலும் உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும்.

10. சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் C, வைட்டமின் B காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். மேலும் உங்களை ஆரோக்கியமாக வைக்க வழிவகுக்கும். எனவே கிடைக்கும் பொழுது சர்க்கரை வள்ளி கிழங்கினை வாங்கி உண்ணுங்கள்.

11. இந்த கிழங்கில் வைட்டமின் A, B, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கிழங்கை சாப்பிடுவதால் உடலில் சத்து தேவைகள் பூர்த்தியாகும்.

12. இக்காலத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனை தங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் பெரும்பாலானவர்கள் கவனமாக இருக்கின்றனர். கிழங்கு வகை உணவுகள் என்றாலே அதில் சிறிதளவாவது கொழுப்பு இருக்கும். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.

13. நமது உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களை நாம் மருந்து தடவி சரி செய்து விட முடியும். ஆனால் அடிபடும் போது நமது உள்ளுறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அப்படிப்பட்டவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதில் இருக்கும் வைட்டமின் B, C மற்றும் நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் ஆகியவை உடலின் உள்ளே ஏற்படும் காயங்கள், வீக்கங்களை விரைவில் குணப்படுத்துகின்றன.

14. ஒரு சிலருக்கு நுரையீரல் காற்றுப் பையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக எம்பஸீமா எனப்படும் நோய் ஏற்படுகிறது. இந்த நோய் சீராக சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுத்தும். இந்த நோய் ஏற்பட்டவர்கள் அடிக்கடி சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வருவதன் மூலம், இந்தநோய் குறைபாடு தீர்ந்து மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமங்களை போக்குகிறது.

15. அன்றாடம் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும், அதிகமான கார வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் வயிறு மற்றும் குடல் போன்றவற்றில் அல்சர் உருவாகிறது. சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது.

16. நோய்கள் ஏற்பட்ட பிறகு அவற்றிற்கான மருந்துகள் சாப்பிட்டு அதை நீக்குவதை விட நோயே வராமல் தடுப்பதுதான் சிறந்தது. இதற்கு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருக்க வேண்டும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் B, C, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.

17. புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன அதில் புகையிலை சார்ந்த பொருட்களை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு வாய் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இத்தகைய புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் நிறைந்து இருக்கும் சத்துகள் புற்றுநோய் செல்களை மேலும் மேலும் வளராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.

18. இதய ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் முக்கியமான சத்துப்பொருள் வைட்டமின் B6 ஆகும். வைட்டமின் B6 நம் உடலில் உற்பத்தியாகும் ஹோமோசயட்டின் என்ற நச்சுப்பொருளை குறைக்கும். இந்த ஹோமோசயட்டின் உடலுக்கு பலவித தீங்குகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இது மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கு இதனை உடலைவிட்டு எளிதில் வெளியேற்றிவிடும்.

19. வைட்டமின் C சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். அது மட்டுமின்றி இது எலும்பை வலிமைப்படுத்துதல், செரிமானம், இரத்தத்தை சுத்திகரிப்பது போன்ற பணிகளையும் செய்கிறது. அதுமட்டுமின்றி காயங்களை விரைவில் குணமாக்குவது சருமத்தின் நெகிழ்வு தன்மையை தக்கவைப்பது என பலவற்றிற்கும் வைட்டமின் C அவசியம். அதுமட்டுமின்றி புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களையும் இது சரிசெய்யக்கூடும். சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் C மற்ற பொருள்களை காட்டிலும் அதிகமாக உள்ளது.

20. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் D நிறைந்துள்ளது. வைட்டமின் D எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் அவசியமானது. நமது உடலுக்கு தேவையான வைட்டமின் D சூரிய ஒளியிலிருந்து எளிதாக கிடைக்கும். ஆனால் சிலசமயம் சூரிய ஒளியால் சில அலர்ஜிகள் ஏற்படலாம். எனவே அதுபோன்ற சமயத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவது வைட்டமின் D இழப்பை சரிசெய்யும். இதன்மூலம் நமது எலும்பு, பற்கள், நரம்புகள் போன்றவை வலுப்பெறும்.

21. நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க இரும்புசத்து அவசியம் என்று நாம் அறிவோம். ஆனால் அதுமட்டுமின்றி இரத்த உற்பத்தி, மனஅழுத்தத்தை குறைத்தல், நோயெதிர்ப்பு மணடலம் சரிவர செய்லபட, உடலியக்கங்கள் சரியாக இருக்க என அனைத்திற்கும் இரும்புசத்து அவசியம். இது சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமாக உள்ளது.

22. சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள மெக்னீசியம் மனஉளைச்சலை சரிபண்ண சிறந்த மருந்தாக இருக்கிறது. மருத்துவர்களின் அறிக்கை படி நான்கில் ஒருவருக்கு மெக்னீசிய குறைபாடு உள்ளது. இதனால் இரத்த சுழற்சியில் மாற்றம், இதை அடைப்பு, வலுவில்லாத எலும்புகள் என பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய சர்க்கரை வள்ளி கிழங்கு சரியான தேர்வாக இருக்கும்.

23. நமது சிறுநீரகம் சரியாக செயல்பட அவசியமான ஒன்று பொட்டாசியம். மேலும் இதய துடிப்பு சீராக இருக்கவும், நரம்பு மண்டலம் சரியாக செயல்படவும் பொட்டாசியம் அவசியமானது. சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகமுள்ள இது தசைப்பிடிப்புகளை சரிசெய்தல், வீக்கத்தை குறைத்தல் போன்ற பல பிரச்சினைகளை சரிசெய்ய கூடியது.

24. இதன் பேரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர இது எந்த விதத்திலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இயற்கையாகவே இதிலுள்ள சர்க்கரை மிகவும் மெதுவாகவே இரத்தத்தில் கரையும். இதனால் இதனை கரைப்பது மிகவும் எளிது. அதுமட்டுமின்றி சோர்வு மற்றும் எடை அதிகரிப்பிற்கு இதனை பயன்படுத்தலாம்.

25. இதன் நிறமே உணர்த்தும் இதிலுள்ள கரோட்டீன்களை பற்றி. இதிலுள்ள பீட்டா கரோட்டின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. பீட்டா கரோட்டின் உங்கள் விழித்திரையை பாதுகாப்பதுடன் உங்கள் குணமாகும் தன்மையையும் அதிகரிக்கும். மேலும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதுடன் வயதான தோற்றத்தையும் குறைக்கும். குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது.

26. நுரையீரல் காற்றுப் பையில் எழும் பிரச்சனையின் காரணமாக வரும் நோய்தான் எம்ஃபைசீமா என்பது. இந்த நோயினால் சிறிது சிறிதாக ஆரம்பித்து மூச்சு விடுவதில் பிரச்சனை உண்டாகும். இதற்கு தினமும் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும்.

27. இதில் இருக்கும் மாக்னீசியம் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ரத்த குழாய்களில் நன்கு சுருங்கி விரிய உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களும் இதனை சாப்பிடலாம்.

28. கண்பார்வை கூர்மையாக்கும். மற்றும் இதனை சாப்பிட்ட உடன் பசி அடங்கிய நிறைவு ஏற்படும். அடுத்து நீண்ட நேரம் பசி எடுக்காது. அதனால் விரத காலங்களில் சர்க்கரை வள்ளி கிழங்கு சார்ந்த உணவுகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது.

👍👍👍 Thanks For Reading 👍👍👍